மாலை நேரம். சென்னை மாநகரத்தின் பல அலுவலகங்களில் தன்னுடைய வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்ப தயாராகும் ஊழியர்கள். ஆனால் ஒரு சிமெண்ட் கம்பெனியில் "சீப் அக்கவுண்டண்டாக" வேலைபார்க்கும் சேதுவிற்கு மட்டும் இப்பொழுது தான் நாள் தொடங்கியது போல் வேலை பளு.
முப்பத்தி ஐந்து வயது சேது. மாநிறம். ஒல்லியான தேகம். தீர்க்கமான கண்கள். எதையும் தாங்கும் இதயம் உள்ள உழைப்பாளி. நேர்மையின் சிகரம். அவரது மேஜையில் எழுதிய வாசகம் "செய்யும் தொழிலே தெய்வம்" போல் தான் அவருடைய வாழ்க்கையும்.
இன்னும் சில கோப்புகளுடன் ஆபீஸ் பாய் ஆறுமுகம் சேதுவின் அறைக்கு வருகிறான்.
"மேனேஜர் இத உங்க டேபிள்ள வைக்க சொன்னாரு சேதுநா..." என்றான்.
அதை பொருட்படுத்தாமல் தன்னுடைய வேலையை செய்துகொண்டு இருக்கிறார் சேது.


